அமைச்சரை விமர்சித்த இளைஞர் கைது - மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின்

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து, சமூக வலைதளத்தில் விமர்சனம் பதிவிட்டிருந்த கடலூர் வீரமுத்து என்ற இளைஞர், சென்னை - விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
அமைச்சரை விமர்சித்த இளைஞர் கைது - மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின்
x
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து, சமூக வலைதளத்தில் விமர்சனம் பதிவிட்டிருந்த கடலூர் வீரமுத்து என்ற இளைஞர், சென்னை - விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கடலூர் வீரமுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

ஊடகங்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், கடலூர் வீரமுத்துவுக்கு, நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். வீர முத்துவிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் முன்பு வீரமுத்து மன்னிப்பு கோரினார்.

Next Story

மேலும் செய்திகள்