கார்த்திகை தீப விழாவிற்கு தயாராகும் அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
கார்த்திகை தீப விழாவிற்கு தயாராகும் அண்ணாமலையார் கோயில்
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஒட்டி, தினமும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 

இந்நிலையில் நவம்பர் 18ஆம் தேதி மகா தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து நவம்பர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக பஞ்சமூர்த்தி வாகனங்கள், தேர் சங்கிலிகள் உள்ளிட்டவை மராமத்து செய்யும் பணிகளும், வர்ணம் பூசும் பணிகளும் முழுவீச்சில் நடக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்