ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியை மீது கொடூர தாக்குதல்

சிதம்பரத்தில் வயதான பெண்ணை கடப்பாறையால் தாக்கி நகை பணத்தை திருட முயன்றவர்களை, அப்பகுதி மக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியை மீது கொடூர தாக்குதல்
x
* சிதம்பரம் நாட்டுபிள்ளை தெருவில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆன இவரதுவீட்டுற்கு வந்த, வாகன ஓட்டுனர்களான ராஜா, கண்ணன் ஆகியோர், வீடு வாடகைக்கு 
வேண்டும் என கேட்டுள்ளனர். 

* அப்போது திடீரென கடப்பாறையால் ஜெயலெட்சுமியை தாக்கிய அவர்கள், வீட்டில் இருந்த நகை , பணத்தை திருட முயன்றுள்ளனர். ரத்தம் வடிய ஜெயலெட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, திருட முயன்ற ஓட்டுனர்களை மடக்கி பிடித்தனர். 

* பின்னர் கட்டிவைத்து சரமாரியாகபொதுமக்கள் தாக்கியதில் இருவரும் முகம் சிதைந்த நிலையில், பலத்த காயம் அடைந்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Next Story

மேலும் செய்திகள்