வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் பார்த்தசாரதியிடம் தகவல் கொடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story