நெருங்கும் தீபாவளி : கரூரில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வெல்லம் மற்றும் மூலிகை சர்க்கரை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நெருங்கும் தீபாவளி : கரூரில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்
x
கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதையடுத்து அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். 

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர்14 ஆண்டுகளாக மூலிகை சர்க்கரையை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கரும்பு சாறுடன்  சுக்கு, ஏலக்காய், மிளகு, அதிமதுரம் உள்ளிட்ட 12 வகையான மூலிகைப்பொருட்களை சேர்த்து மூலிகை சர்க்கரை தயார் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள், இனிப்பாக உரிமையாளர்கள், சிறுதானிய தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மூலிகை சர்க்கரை மற்றும் நாட்டு சக்கரையை அதிக அளவில் வாங்கிச்செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்