"கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" - முதலமைச்சர் பெருமிதம்

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் நான்கரை லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர் பெருமிதம்
x
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'உயிர்' என்ற அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்கூட வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்