டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
x
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் இருக்கிறதா? என்பது குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். 

Next Story

மேலும் செய்திகள்