சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை...
தஞ்சாவூர் அருகே செல்போன் திருடியதாக 14 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து, நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை கொடுத்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவையாறு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், செல்போன் திருடியதாகக் கூறி 14 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து சூடு வைத்துள்ளார். அத்துடன், சிறுமியை நிர்வாணமாக்கி, 5 பேர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி மயங்கி விழுந்ததால், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், 16 வயது சிறுவன் உள்பட 5 பேரை திருவையாறு போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story