1500 க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளோம் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்

தமிழகத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் மீட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
1500 க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளோம் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்
x
* தமிழகத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் மீட்டுள்ளதாக 
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

* திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் உலோக திருமேனி பாதுகாப்பகத்தில் உள்ள சிலைகளின் உண்மை தன்மை குறித்து, தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பி ராஜன் தலைமையில்  50 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. 

* இந்த ஆய்வுகள் இன்னும் சில நாட்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மணி நேர ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகளை மீட்டுள்ளதாகவும், பல கோடி மதிப்பிலான சிலைகளை வெளி நாடுகளுக்கு  கடத்தி செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்