பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வெங்கையா நாயுடு மூலம் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி

சென்னை சுபா நகரில் வசித்து வந்த அருண்குமார் என்பவர் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி 41 லட்சம் மோசடி செய்துள்ளதாக கதிர்காமன் என்பவர் தெரிவித்துள்ளார்.
பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வெங்கையா நாயுடு மூலம் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி
x
திருநெல்வேலி மாவட்டம் அக்கரைப்பட்டியை சேர்ந்த கதிர்காமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அதில், சென்னை பழைய பல்லாவரம் சுபா நகரில் வசித்து வந்த அருண்குமார் என்பவர் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் மூலம் 13 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 41 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாக உள்ள அருண்குமாரை கைது செய்து பணத்தை மீட்டு தரவேண்டும் எனவும் கதிர்காமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்