மீண்டும் திகில் கிளப்பிய திருச்சி ஏர் இந்தியா விமானம் : உயிர் தப்பிய 114 பயணிகள்

திருச்சியில் இருந்து துபாய்க்கு கிளம்பிய விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு முன் கூட்டியே கண்டறியப்பட்டதால் 114 பயணிகள் உயிர் தப்பினர்.
மீண்டும் திகில் கிளப்பிய திருச்சி ஏர் இந்தியா விமானம் : உயிர் தப்பிய 114 பயணிகள்
x
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு, தினந்தோறும், ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு, 12 மணிக்கு திருச்சிக்கு வரும் இந்த விமானம், அதிகாலை 1 மணிக்கு, துபாய்க்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

கடந்த 12ஆம் தேதி, திருச்சியில் இருந்து விமானம் புறப்பட்ட போது, அருகில் இருந்த சுற்றுச்சுவரை உரசிச் சென்றது. அதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்றிரவு மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமானம் வழக்கம் போல ஓடுதளத்தில் பயணிக்க தொடங்கிய போது, இஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, பயணத்தை ரத்து செய்த விமானி, விமானத்தை அவசர அவசரமாக நிறுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த 114 பயணிகள் உயிர் தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்