சுற்றுச்சுவரில் விமானம் மோதிய விவகாரம் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு விமானம் பறந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுச்சுவரில் விமானம் மோதிய விவகாரம் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
x
திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு விமானம் பறந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். விமான போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும், விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய துணை குழு ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, அதே விமானத்தில் இறங்கி, குடும்பத்துடன் சொந்த ஊர் சென்ற ராஜா என்ற பயணியின் கார் கண்ணாடி, சுவற்றின் கற்களால் சேதமடைந்தது. இதில் ராஜாவின் மனைவி மணிமாலாவுக்கு காயம் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்