மதுரை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
x
மதுரையில் நேற்று முன் தினம் பெய்த கனமழை காரணமாக, ஆனையூர் மற்றும் கூடல்புதூர் கண்மாய்கள் நிரம்பின. இதனால், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு, புறநகர்ப் பகுதிக்குள் நீர் புகுந்தது. ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் கூடல் நகர் பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்