நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது - திருமாவளவன்

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது - திருமாவளவன்
x
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்துக்கு பெரும் ஆபத்து என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக ஆளுநர் அலுவலகம் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்