பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கொடுத்துவிட்டு பெண் மாயம் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேருந்துக்காக காத்திருந்தவரிடம் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கொடுத்துவிட்டு பெண் மாயம்
பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கொடுத்துவிட்டு பெண் மாயம் - வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
x
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் கஜலட்சுமி பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நின்று இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கஜலட்சுமியிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக அந்தப் பெண் வராததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தை மீட்டு  காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவில் பராமரிக்க அனுமதித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்