அரசு கொள்முதல் செய்யாததால் நெல் முளைத்து விட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
தஞ்சை மாவட்டம் வயலூரில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் வயலூரில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் நெல்களை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story