தொடர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தொடர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு
x
* நெல்லை, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் , அம்பாசமுத்திரம் , தென்காசி, செங்கோட்டை  உள்ளிட்ட  பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. 

* நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு அணைப்பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

* நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம்  ஒரே நாளில் 14 அடி உயர்ந்து 49 அடியாக தற்போது உள்ளது. 

* பாபநாசம் அணையின் நீர்மட்டம் 106 அடியாக உள்ளது . இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

* பேச்சிப்பாறை  அணையின் நீர்மட்டம் 26 புள்ளி 40 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம்  68 புள்ளி 25  அடியாகவும் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்