"பவானிசாகரில் 102 அடி வரையே தண்ணீர் தேக்கப்படும்" - ஈரோடு மாவட்ட ஆட்சியர்
மழை காரணமாக பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும் என்றும் உபரி நீர் வெளியேற்றப்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக, பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும் என்றும் உபரி நீர் வெளியேற்றப்படும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை - வெள்ளத்தால், காவிரி மற்றும் பவானி ஆறுகளின் கரையோரப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மழை-வெள்ள பாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் ஈரோடு ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.
Next Story