மழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்

மழைக்காலம் முடிந்த பிறகு, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்துள்ளார்.
மழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்
x
* டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்தார்.. சத்தீஷ்கரில் நவம்பர் 12  மற்றும்  நவம்பர்  20 ந்தேதி வாக்குப்பதிவு நடக்கும் என்றார்.
 
* மத்திய பிரதேசம், மிசோரமில் நவம்பர் 28 லும், ராஜஸ்தான், தெலங்கானாவில்  டிசம்பர் 7 ந்தேதியும்  சட்டமன்ற தேர்தல் நடக்கும் என அறிவித்துள்ளார். 

* 5 மாநிலங்களிலும் டிசம்பர் 11 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்ட மாநிலங்களில்,  தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு  வருவதாகவும் தெரிவித்தார். 

* தற்போதைய மழைக்காலம் முடிந்த பின்னர் தமிழக இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்