"ஸ்டெர்லைட்டுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியது" - வைகோ

"நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை"
ஸ்டெர்லைட்டுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியது - வைகோ
x
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்த கூட்டத்தில்,  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வாலா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஸ்.சி. கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டனர்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் அப்துல் சலீம், தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா, திமுக முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் தரப்பு மனுக்களை அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சார்பிலும், மூவர் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்