சப்தமில்லாமல் சாதனை படைக்கும் கால்பந்தாட்ட அணி - இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வட சென்னை வீரர்கள்

மெட்ராஸ் திரைப் படத்தில் வரும் இளைஞர்கள் கால்பந்தாட்ட வீரர்கள். வடசென்னையின் அடிதடி கலாச்சாரத்தை மாற்ற முயற்சிக்கும் ஒருவரின் கதை அது. அதை நிஜத்தில் செய்து சாதனை படைக்கும் இளைஞர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.
சப்தமில்லாமல் சாதனை படைக்கும் கால்பந்தாட்ட அணி - இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வட சென்னை வீரர்கள்
x
வடசென்னை என்றாலே கொலை, கொள்ளை, ரவுடித்தனம் என்பது தான் நினைவிற்கு வரும்... இதனால், அங்கு இருக்கும் பல திறமையான வீர‌ர்கள், வீராங்கணைகள் வெளி உலகிற்கு தெரிவதில்லை... குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீர‌ர்கள் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார்கள்.வியாசர்பாடி இளைஞர்களை  கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம்கொண்ட தங்கராஜ், உமாபதி, சுரேஷ் ஆகிய மூவரும் தங்களுக்கு தெரிந்த கால்பந்தாட்டத்தை அதற்கு கருவியாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் வியாசர்பாடி முல்லை நகரின் கால்பந்தாட்ட மைதானத்தில், இலவச பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களை பற்றி அறிந்து கொள்வதற்காக வியாசர்பாடியின் முல்லைநகர் கால்பந்தாட்ட மைதானத்திற்கு சென்றோம்.ஆண்களோடு, இளம்பெண்களும், சிறுமிகளும்  ஆர்வமுடன் கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை காண முடிந்த‌து. இதுகுறித்து அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் கேட்டபோது,  குறைவான ஆடை அணிந்து விளையாட வேண்டும் என்பதால் ஆரம்பத்தில் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், ஒழுக்கத்துடன், விளையாட்டில் சிறந்து விளங்கி, எங்களின் சாதனைகள் மூலம் அவர்களின் பார்வையை மாற்றினோம் என்கிறார் பெருமையுடன்.இந்தியாவை தாண்டி, ஸ்வீடன், இங்கிலாந்து, ஈரான் என இந்த வியாசர்பாடி வீரர்களின் சாதனைப் பட்டியலை பயிற்சியாளர் தங்கராஜும், தியாகும் கூற நம்மை ஆச்சர்யம் ஆட்கொண்டது. விளையாட்டு சாதனைகள் ஒருபுறமென்றால், தனி மனித ஒழுக்கத்துக்கு இவர்கள் தரும் முக்கியத்துவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தூய தமிழில் பேசுவது, புகையிலை, போதை பொருட்களை பயன்படுத்துவதில்லை, கல்வி மற்றும் ஒழுக்கத்துக்கு பிறகுதான் விளையாட்டு என்பதுதான் இவர்களுக்கு விதிக்கப்படும் முக்கிய முதல் நிபந்தனை. வியாசர்பாடி மீது தற்போது பதிந்து விட்ட அடையாளத்தை கால்பந்தாட்டம் மூலம் உதைத்து தள்ள நினைக்கும் இளைஞர்கள் நிச்சயம் இன்றைய நம்பிக்கை நட்சத்திரங்கள்தான் என்பதில் ஐயமில்லை... 




Next Story

மேலும் செய்திகள்