ஸ்டெர்லைட்- க்கு ஆதரவு என நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதம்...
ஸ்டெர்லைட்- க்கு ஆதரவு என நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த மருத்துவர்கள், வணிகர்கள், கிராம மக்கள் கூட்டாக சென்னை எழும்பூரில், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேவை என வலியுறுத்தி, முதலமைச்சரிடம் மனு அளிக்க போவதாக கூறி செய்தியாளர்களை அவர்கள் அழைத்துள்ளனர். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வறிக்கையை, ராஜேஷ் என்பவர் வாசித்துள்ளார். இதனால் செய்தியாளர்கள், சரமாரியாக கேள்வி எழுப்பியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story