முட்புதரிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

ஒசூர் அருகே முட்புதரிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
முட்புதரிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
x
ஒசூர் அருகே முட்புதரிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அச்செட்டிப்பள்ளி சாலை ஓரமாக முட்புதரில் கிடந்த அந்த குழந்தையை, அப்பகுதி மக்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், நேற்று அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து மத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்