மன நோயாளி இளைஞரை அடித்து படுகொலை...

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த சங்கர் செல்போன் திருடியதாக குற்றஞ்சாட்டி, அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரும் அவரது நண்பரும் சேர்ந்து, மாமரத்தில் கட்டில் வைத்து தாக்கியுள்ளனர்.
மன நோயாளி இளைஞரை அடித்து படுகொலை...
x
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்.  இவர் மன நிலை பாதிக்கப்பட்டு கூலி வேலை செய்து வருகிறார்.  இதனிடையே சங்கர் செல்போன் திருடியதாக குற்றஞ்சாட்டி, அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரும் அவரது நண்பரும் சேர்ந்து,  சங்கரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று மாதோப்பில் மாமரத்தில் கட்டில் வைத்து  தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சங்கர் அதே இடத்தில் உயிரிழந்தார்.  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்