சேலம் : சிறந்த அதிகாரி என விருது பெற்றவர் தற்கொலை..!

சிறப்பான முறையில் பணியாற்றியமைக்காக விருது பெற்ற சேலத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற வேளாண் அதிகாரி பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் : சிறந்த அதிகாரி என விருது பெற்றவர் தற்கொலை..!
x
சேலம் மாவட்டம் பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக வேளாண் துறையில் பணியாற்றி வந்தார். இவர் சிறப்பாக பணியாற்றியமைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றுள்ளார். இந்தநிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டின் அருகே உள்ளே மரத்தில் சிவகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சிவகுமார் தூக்கில் தொங்கியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சிவகுமாரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பணிச்சுமை பணியிட மாறுதல் அதிகாரிகளின் அழுத்தம் உள்ளிட்டவற்றால் சிவகுமார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களும் நண்பர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்