வங்கியில் கொள்ளை முயற்சி : 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் தப்பியது...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இந்தியன் வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கியில் கொள்ளை முயற்சி : 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் தப்பியது...
x
* செங்கத்தை அடுத்த எறையூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், கடந்த 3 நாட்களாக விடுமுறை என்பதால் நோட்டமிட்ட மர்மநபர்கள் சிசிடிவி கேமராவின் கேபிள்களை துண்டித்தும், பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து விட்டும் உள்ளே நுழைந்துள்ளனர்.

* எனினும், நகை, பணம் இருந்த லாக்கர்  உடைக்க 
அவர்களால் முடியவில்லை.  இந்நிலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை அறிந்த மக்கள்  காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி விசாரணை மேற்கொண்டார். 

* பின்னர் வங்கி மேலாளரை அழைத்து வந்து பார்த்தபோது 7 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது தெரியவந்தது. மோப்ப நாய் உதவியுடன் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்