ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கி செல்லும் கிராமமக்கள்...
திருவாரூர் மாவட்டம் மேலபூவனூர் கிராமத்தில், ஆற்றில் நீந்தியபடி, இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கும் அந்த கிராமமக்கள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொண்டி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று உயிரிழந்த அமிர்தவள்ளி அம்மாள் என்பவரது உடலை, ஆற்றுக்குள் இறங்கி எடுத்துச் சென்ற உறவினர்கள் பின்னர் சுடுகாட்டில்
எரித்தனர்.
Next Story