தமிழகத்தின் இந்த ஊரில் தான் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படுகிறது தெரியுமா?

தமிழகத்தில் மற்ற நகரங்களை விட, இந்த ஊரில் மட்டும் தான், பெட்ரோல், டீசல், அதிக விலையில் விற்கப்படுகிறது.
தமிழகத்தின் இந்த ஊரில் தான் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படுகிறது தெரியுமா?
x
* தமிழகத்தில் மற்ற நகரங்களை விட , கடலூரில் மட்டும் தான், பெட்ரோல், டீசல், அதிக விலையில் விற்கப்படுகிறது. 

* சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி என்ற ஊரில் மிக அதிக விலைக்கு பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது. 

* அங்கு இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் 87 ரூபாய் 69 காசுகளுக்கும், டீசல் 80 ரூபாய் 15 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

* இதேபோல,  கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாய் 37 காசுகளுக்கும், டீசல் 79 ரூபாய் 86 காசுகளுக்கும் விற்பனையாகிறது. 

* இது சென்னையை விட இரண்டு ரூபாய் அதிகம். இந்த விலை வித்தியாசத்திற்கு காரணம் போக்குவரத்து செலவு தான் என கூறப்படுகிறது. 

* இதனால், கடலூர் மக்கள் தங்களுக்கு  மிக அருகில் இருக்கும் புதுச்சேரிக்கு சென்று பெட்ரோல் நிரப்பிக்கொள்கின்றனர்.

* தமிழகத்தை காட்டிலும் புதுச்சேரியில் பெட்ரோல் விலை ஆறு ரூபாய் குறைவாகவும், டீசல் 3 ரூபாய் குறைவாகவும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்