காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கி வைத்தார் அன்புமணி

காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார்.
காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கி வைத்தார் அன்புமணி
x
காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார். தர்மபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கையெழுத்து போட்டனர். 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்ற பின், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனுவாக அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, உபரிநீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவதன் மூலம், விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்