தஞ்சாவூர் : மீத்தேன் எடுக்க முயன்றதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே துக்காச்சி என்ற கிராமத்தில் மீத்தேன் எடுக்க முயன்றதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் : மீத்தேன் எடுக்க முயன்றதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
பள்ளிக்கு குடிநீருக்காக போர் போடுவதாக மக்கள் நினைத்திருந்த நிலையில் இன்று இரும்பு குழாய்கள் வந்து இறங்கியதால் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் விளக்கம் கேட்டபோது அங்கிருந்த அதிகாரி ஜீப்பில் தப்பி சென்றுள்ளார். பணிகளை நிறுத்திய பொதுமக்கள் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த குழாய்களையும் வெளியே எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்