குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரி மனு

குட்கா முறைகேடு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் ஜாமின் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரி மனு
x
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக உரிமையாளர் மாதவராவ், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் உள்பட ஐந்து பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது சிபிஐ காவலில் உள்ள இவர்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் ஜாமின் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்