குடிபோதையில் கார் ஓட்டிய 4 பேர் : பெரிய இடத்துக்கு பிள்ளைகள் என மிரட்டியதால் பரபரப்பு

சென்னை, வடபழனியில் குடிபோதையில் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்திய போலீசாரை பெண் உள்பட 4 பேர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் கார் ஓட்டிய 4 பேர் : பெரிய இடத்துக்கு பிள்ளைகள் என மிரட்டியதால் பரபரப்பு
x
தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரின் மகன் விஷ்ணுவர்தன், தமது நண்பர்கள்  4 பேருடன்,  வடபழனி சிக்னல் அருகே காரில் சென்றுள்ளார். அப்போது, போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதில், காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆய்வாளர், கூறியதற்கு காரில் இருந்த 4 பேர்  நாங்கள் அனைவரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளனர். இதனால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 3 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்து 4 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்