குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை..!

விருதுநகர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை..!
x
 குப்பாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தொடுதிரை வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. 

நடப்பாண்டு புதுமை பள்ளிக்கான விருதுடன் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை, ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்பு 70 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 6 முதல் 8ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், தொலைக்காட்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளியை விஞ்சிய அரசு நடுநிலைப்பள்ளி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்