தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரிக்கு அரிவாள் வெட்டு : முன்னாள் ஊழியர் வெறிச்செயல்

எழும்பூர் அருகே தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரியை முன்னாள் ஊழியர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரிக்கு அரிவாள் வெட்டு : முன்னாள் ஊழியர் வெறிச்செயல்
x
சென்னை பெரியார்நகரை சேர்ந்த முத்துகுமார்  சோழிங்கநல்லூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேலாளராக பணிபுரிந்து வந்தார். பணி சரியில்லாததால் முத்துகுமாரை நிர்வாகம் வேலையை விட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் எழும்பூரில் வசித்து வரும் தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியான அஸ்வின் இல்லத்திற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அஸ்வினின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், முத்துகுமாரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த அஸ்வின் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்