கொலை மிரட்டல் எதிரொலி : அர்ஜூன் சம்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்யும் நோக்கத்தில் சிலர் கோவை வருவதாக மத்திய புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 3 பேருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கொலை மிரட்டல் எதிரொலி : அர்ஜூன் சம்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
x
இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்யும் நோக்கத்தில் சிலர் கோவை வருவதாக மத்திய புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து ரயில் மூலமாக கோவை வந்த ஜாபர் அலி, இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன் மற்றும் அவர்களை வரவேற்க வந்த ஆசிக் ஆகியோரை மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். சமூக வலைதளத்தில் அர்ஜூன் சம்பத், அவரின் மகன் ஓம்கார் பாலாஜி மற்றும் இந்து முன்னணி பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோருக்கு 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 பேருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை கோவை போலீசார் அதிகரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்