தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்..!

தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்..!
x
சேலம்
   கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் கிச்சிபாளையம் பகுதியில், நீலாயதாட்சி அம்மன் குலாளர் மாதர் சங்கம் மற்றும் பாவயாமி குழுவினர் சார்பில் 40-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அலங்காரம் செய்யப்பட்ட கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் குழந்தைகளின் நடன நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திண்டுக்கல் :
   திண்டுக்கல் யாதவ மேட்டு ராஜக்காப்பட்டி கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக வான வேடிக்கைகளும், உறியடி போட்டியும் நடைபெற்றது.

நாகர்கோவில் :
   நாகர்கோவிலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணன் ராதா வேடங்கள் அணிந்த சிறு குழந்தைகளின் ஊர்வலமும் நடைபெற்றது.

மாமல்லபுரம் :
   மாமல்லபுரம் நவநீதகிருஷ்ணன் கோவிலில் பத்து நாள் உறியடி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆலிலைக் கண்ணன் திருக்கோலத்தில் கிருஷ்ணன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

நடிகர் ரஜினி வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
   
   நடிகர் ரஜினி வீட்டில் மனைவி லதா உற்சாகமாக பாடல்ளை பாடி நடனமாடி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
   சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினியின் வீட்டில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா, கொண்டாடப்பட்டது. இதில் அவரின் மனைவி லதா, உற்சாகமாக பாடல்ளை பாடி,  நடனமாடினார்.


Next Story

மேலும் செய்திகள்