சென்னையில் இன்று கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் - அரசியல் தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

சென்னையில் இன்று நடைபெறும் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பல மாநில முதலமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சென்னையில் இன்று கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் - அரசியல் தலைவர்கள்,  பிற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு
x
* மறைந்த முன்னாள்  முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னை ஒய்.ம்.சி ஏ. மைதானத்தில் இன்று மாலை 
நடைபெறவுள்ளது.

* திமுக பொது செயலாளர் அன்பழகன் தலைமையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்கிறார்.

* ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்து கொள்கின்றனர். 

* முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர்  குலாம் நபி ஆசாத் ,தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார்,  சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

* மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். விமான நிலையம் முதல் ஒய்எம்சிஏ மைதானம் வரையிலும், மாநாட்டு அரங்கிலும் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்