குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? : சென்னை உயர்நீதிமன்றம்

குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து உள்துறை. சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? : சென்னை உயர்நீதிமன்றம்
x
சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 8 மாத குழந்தை ராகேஷ் மற்றும் வால்டாக்ஸ் சாலையோரம் தூங்கிய குழந்தை சரண்யாவை மீட்க போ​லீசுக்கு உத்தரவிடக்கோரி எக்ஸ்னோரா நிறுவனர் நிர்மல் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். 

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தை கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

 இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்ததோடு, அதிக முக்கியத்துவத்தை அரசு இந்த வழக்குக்கு வழங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தனர். 

இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் அழுத்தம் கொடுத்து தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்றும், அரசே முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

நாட்டின் எதிர்காலம் கடத்தப்படுவதை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாகவும்  நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். போலீசாரின் குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதாது என்றும் நாட்டின் கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும்  நீதிபதிகள் தெரிவித்தனர். 

வரும் செப்டம்பல் 24 ஆம் தேதி,  குழந்தை கடத்தல் தொடர்பாக உள்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள​னர்.

Next Story

மேலும் செய்திகள்