ரூ.325 கோடி மதிப்பில் கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

முக்கொம்பு மேலணையில் 325 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ரூ.325 கோடி மதிப்பில் கொள்ளிடத்தில் புதிய அணை கட்டப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
x
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதகு உடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தற்காலிக சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் காமராஜ், வெல்லமண்டி நடராஜன், துரைகண்ணு, வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மேலணையில் 325 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணையும், 85 கோடி ரூபாய் செலவில் கதவணையும் கட்டப்பட உள்ளதாக அறிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்