கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள்

கேரளாவுக்கு ரயிலில் நிவாரண பொருட்களை இலவசமாக எடுத்து செல்ல சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள்
x
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கேரள மக்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் எடுத்து அனுப்பபட்டு வருகின்றன. ரயிலில் நிவாரண பொருட்களை இலவசமாக எடுத்து செல்லலாம் என  ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பார்சல் புக்கிங் அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. நிவாரண பொருட்களை அனுப்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சென்னை சென்ட்ரல் தெற்கு ரயில்வே வணிக பிரிவை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்