"தமிழர்களை கேரளா அரசு கண்டு கொள்வதில்லை" - வெள்ளத்தில் சிக்கிய தமிழர் குற்றச்சாட்டு

கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
தமிழர்களை கேரளா அரசு கண்டு கொள்வதில்லை - வெள்ளத்தில் சிக்கிய தமிழர் குற்றச்சாட்டு
x
* கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.  

* அவர்களை மீட்டுத் தரக்கோரி, உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

* இதனிடையே,  வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பந்தனம்திட்டா பகுதியில் சிக்கியுள்ள பிரகாஷ் என்பவர் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்