கோயில் யானை, காவிரி ஆற்றில் ஆனந்தக் குளியல்..!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானை, காவிரி ஆற்றில் ஆனந்தக் குளியல் போட்டு மகிழ்ந்தது.
கோயில் யானை, காவிரி ஆற்றில் ஆனந்தக் குளியல்..!
x
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, துலாக்கட்டம் வந்து சேர்ந்தது. தினமும் குழாய் நீரில் குளித்து வந்த மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, காவிரி ஆற்றில் நீராட அழைத்துச் செல்லப்பட்டது. 

ஆற்று நீரைப் பார்த்ததும் உற்சாக மிகுதியில் ஆற்றுக்குள் இறங்கிய யானை, தண்ணீரில் உருண்டும் புரண்டும், கும்மாளமிட்டபடி நீரை உறிஞ்சி வாரி இறைத்தது. இதனை அங்கிருந்த பக்தர்கள் கண்டு மகிழ்ந்ததுடன், செல்போனில் படம் பிடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்