2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை - மறுமணம் செய்ய பெண் கிடைக்காததால் விரக்தி..!

நாமக்கல் அருகே மறுமணம் செய்ய பெண் கிடைக்காத விரக்தியில் 2 குழந்தைகளுடன் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை - மறுமணம் செய்ய பெண் கிடைக்காததால் விரக்தி..!
x
நாமக்கல் மாவட்டம் காவக்காரன்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி பூவாயி கடந்த 3 வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். மனைவியின் மறைவைத் தொடர்ந்து, தன் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த ராஜகோபால் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் அவருக்கு பெண் கிடைக்காமல் இருந்து வந்தது. மேலும், 2 குழந்தைகளையும் வைத்து பராமரிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். 

இந்நிலையில்,  ராஜகோபால் தன் 2 குழந்தைகளை கொலை செய்து மரத்தில் தொங்க விட்டுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்