திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் : மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற அவலம்

ஆரணி அருகே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர், மருத்துவமனையிலே விட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் : மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற அவலம்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தைசேர்ந்த 18 வயது இளம்பெண்ணான லட்சுமி என்பவர் ஆரணியை சேர்ந்த ஒருவரை காதலித்துவந்த‌தாக தெரிகிறது. இதில், லட்சுமி கர்ப்பமான நிலையில், தனது காதலர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்துள்ளார். அவரை விட்டு விலகிய லட்சுமி, வேலூர் மருத்துவமனையில், குழந்தை பெற்றெடுத்துள்ளார். மருத்துவமனையிலே குழந்தையை, லட்சுமி விட்டுச்சென்ற நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தினர், லட்சுமியின் முகவரியை ஆய்வு செய்து  குழந்தையை ஒப்படைத்தனர். மீண்டும் 7நாட்களில் குழந்தையை எஸ்.வி.நகரம்  பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் விட்டு சென்றுள்ளார் லட்சுமி. அந்த குழந்தையை தற்போது, திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு துறையினர் பாதுகாத்துவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்