"காவிரியில் நீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது" - ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர்

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள தடுப்பணையை தாண்டி, நீர் சென்று கொண்டிருக்கிறது.
காவிரியில் நீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது - ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர்
x
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, திருச்சி கம்பரசம்பேட்டையில் உள்ள தடுப்பணையை தாண்டி, நீர் சென்று கொண்டிருக்கிறது. தடுப்பணையை கடந்து செல்லும் நீரின் அளவு, 17 ஆயிரத்து 800 கன அடியாக உள்ளது. இதையடுத்து, தடுப்பணையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராசாமணி, காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆற்றுப் பகுதிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்