மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறுவர் காப்பகத்தில், நீண்ட நாட்களாக சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.
மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...
x
தக்கலை அருகே ஆலங்கோட்டில்  செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி தங்கஇசக்கி தங்க வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் காப்பகத்தில் சிறுமிக்கு சூடு வைத்ததோடு 4 நாட்கள் இருட்டறையில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக காப்பக ஊழியர் வினோதினி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்நிலையில் இதுபோன்ற சித்ரவதைகள் தொடர்கதையாக அங்கு நடந்து வருவதாகவும் அவர் மீண்டும் கூறியுள்ளார். அந்த காப்பகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததாலும், அங்கு உள்ள சிறுவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் உள்ளதாலும், அரசு உடனே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்