காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, காப்பக வார்டன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது
x
ஆலங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான காப்பகத்தில், 17 வயது சிறுமி தங்க இசக்கி, உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், 4 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி சூடு வைத்து சித்ரவை செய்யப்பட்டதை கேள்விபட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். சிறுமியை கொடுமைப்படுத்திய காப்பக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்