17 வயது குற்றவாளிக்கு வழங்கப்பட்ட புதுவித தண்டனை

தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு சேவை செய்ய உத்தரவு
17 வயது குற்றவாளிக்கு வழங்கப்பட்ட புதுவித தண்டனை
x
சென்னை வியாசர்பாடியில் கடந்தமாதம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், ராஜ்குமார் என்ற 17 வயது சிறுவன், மதுபோதையில் ஒருவரை அரிவாளால் வெட்டினான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராஜ்குமார், கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த  சிறார் நீதிமன்ற நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா, 
வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன்,  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஒரு வாரம் சேவை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்