மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே உள்ள 51 கடைகளை திறக்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
x
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து கோயிலின் உள்ளே இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் கடைகளை திறக்க அனுமதி கோரி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், கோயிலின் உள்ளே இருக்கும் 51 கடைகளை திறக்க அனுமதி அளித்தார். மேலும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கடைகளை வைத்துக்கொள்கிறோம் என உறுதி மொழி பத்திரம் அளிக்கவும், நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை செலுத்தவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்