தாயை கொன்று புதைத்து காணவில்லை என போஸ்டர் ஒட்டி நாடகமாடிய மகன் கைது

மயிலாடுதுறை அருகே தாயை கொன்றுவிட்டு காணவில்லை என போஸ்டர் ஒட்டி மகன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயை கொன்று புதைத்து காணவில்லை என போஸ்டர் ஒட்டி நாடகமாடிய மகன் கைது
x
அங்குள்ள வாளவராயன்குப்பத்தில் வசித்து வரும் கலியமூர்த்தி, குடும்ப சண்டையின் போது தாய் உய்யம்மாளை கீழே தள்ளியுள்ளார். இதில் உய்யம்மாள் இறந்துவிட, வீட்டின் கொல்லைப்புறத்தில் குழிதோண்டி தாயின் சடலத்தை புதைத்துள்ளார். பின்னர் தாயை காணவில்லை என ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து கலியமூர்த்தி ஒட்டியுள்ளார். சந்தேகித்த ஊர் நாட்டாமை சுப்பையன், கலியமூர்த்தியிடம் விசாரித்த போது, உண்மை வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து நாட்டாமை அளித்த புகாரின் பேரில், கலியமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். உய்யம்மாளின் உடலை தோண்டி எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெற்ற தாயை கொன்று புதைத்து மகன் நாடமாடிய சம்பவம் வாளவராயன்குப்பம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்